Friday, January 12, 2024

எங்கே நிம்மதி?

 எங்கே நிம்மதி?


வாழ்க்கை ஒன்றும் புரியவில்லை

வாழத் தானே தெரியவில்லை

எங்கும் எதுவும் புரியவில்லை

ஏனோ ஏனோ தெரியவில்லை!


மேடு பள்ளம் ஓடுகிறேன்

காடுக ளுக்குள் தேடுகிறேன்

கடலுக் குள்ளே நீந்துகிறேன்

வானில் நானும் பறக்கின்றேன்


கிழக்கை ஒருவர் காட்டுகின்றார்

மேற்கில் ஒருவர் தேடென்றார்

தெற்கில் ஒருவர் போஎன்றார்

வடக்கில் ஒருவர் கிடைக்குமென்றார்!


நாலு திசையும் சென்றுவந்தேன்!

வாழ்க்கை ஒன்றும் புரியவில்லை!

அலைந்து அலைந்தே மயங்குகிறேன்!

நிம்மதி ஏனோ கிடைக்கவில்லை?


மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home