Monday, January 08, 2024

இல்லறம்சிறக்க

 இல்லறம் சிறக்க!


துள்ளி மகிழ்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும்

இல்லறத்தை ஏற்ற இணையராய் மாறியதும்

முள்ளில் நடக்கும் உணர்வில் முகஞ்சுழித்தே

உள்ளத்தால் வாடுவதும் ஏன்?


இல்லறத்தை ஏற்பதே இன்பமாய் வாழ்வதற்கு!

உள்ளத்தால் ஒன்றிய விட்டுக் கொடுக்கின்ற

பக்குவத்தை ஏற்று நடந்துகொண்டால் இல்லறத்தில்

வெற்றி மணக்கும் உணர்.


இன்றைய வாழ்க்கை முறையிலே வீட்டுக்குள்

ஒன்றி பிள்ளைகளுடன் வாழ்தல் சிறப்பாகும்!

தங்கி இருக்கின்ற நேரம் குறைவுதான்!

பிள்ளைகள் பள்ளிகள் கல்லூரி என்றேதான்

பல்முனை ஆற்றலைத் தேடிப் பறக்கின்றார்!

பெற்றோர் வருமானம் பார்க்கப் பறக்கின்றார்!

இப்படி வாழ்வதோ இங்கே குடும்பங்கள்

பல்வளங்கள் காணத்தான் சொல்.


வேகமான வாழ்வை விவேகமாய் வாழ்வதற்கு

நாடவேண்டும் பெற்றோர் இணக்கமாக வாழவேண்டும்!

தேவையற்ற ஆணவம் வம்படிப் பேச்சுகள்

கேவலத்தை உண்டாக்கும் பார்.


கணவன் மனைவி ஒருவர்க் கொருவர்

மனத்திலே மாசின்றி அன்பில் கரைந்தே

அமைந்திருக்கும் வாழ்வை அமளியாக் காமல்

குழந்தைகள் வாழ்வைப் பராமரித்து வாழ்ந்தால்

நலமுடன் நிம்மதி உண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home