Monday, January 22, 2024

திமிங்கலத்தின் முடிவு!



 திமிங்கலத்தின் முடிவு!


திமிங்கலம் சாவை அறிந்துகொள்ளும் ஆற்றல்
இருப்பதால் அந்தநேரம் கூட்டத்தை விட்டே
தனிமைப் படுத்தி இறந்துவிடு மிங்கே!
உயிர்மூச்சு போனபின் மற்ற கடல்வாழ்
உயிரினங்கள் அந்தத் திமிங்கலத்தை மொய்த்தே
உணவாக்கிச் செல்லும்! எலும்புகளின் கூடு
கடலுக் கடியிலே சென்றேதான் தங்கும்!
இதுதான் திமிங்கலத்தின் சாவு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home