Monday, March 04, 2024

இணையற்ற இணையர்

 இணையற்ற இணையர்!


மனைவி ஒருத்திதான் காக்கும் இமைகள்!

மனைவி ஒருத்திதான் காக்கும் கரங்கள்!

மனைவி ஒருத்திதான் காக்கின்ற கால்கள்!

மனைவிதான் பார்த்துத் துடிக்கும் இதயம்!

மனைவிதான் வாழ்வின் உயிர்.


கணவனும் இப்படி இல்லறத்தில் என்றால்

இணையர் இணையற்றோர்  சொல்.


மற்றவர் எல்லோரும் வாழ்க்கைப் பயணிகள்!

தங்கள் இடம்வந்தால் ஓடி இறங்கிடுவார்!

புண்பட்ட போதும் முணங்கி உடன்வருவார்

என்றும் இணையர்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home