Tuesday, January 28, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

முதுமைப் பருவம் வருடுகின்ற போது
முகத்தின் அழகோ பயணித்து நாளும்
அகத்தில் இறங்கும்! கவர்ச்சி மறையும்!
பிறரையோ புண்படுத்தல் ஞானமாய் மாறும்!
சிறப்பான வாழ்வின் தருணங்கள் நாளும்
நினைவிலே தேக்கும் நிலையெடுக்கும்! உண்மை
அழகென்றால் இப்போது நீங்கள் மகிழும்
நிலையல்ல! உங்களால் மற்றவர்கள் இங்கே
மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி என்று
இருப்பதே வாழ்வென் றுணர்.

மதுரை பாபாராஜ்

அருமையான கருத்துக்கள் நிறைந்த பல விகற்ப பஃறொடை வெண்பா! மனத்தில் நினைத்ததை மனம்திறந்து சொல்லி விட்டீர்கள்!

வலையபட்டி கன்னியப்பன்

0 Comments:

Post a Comment

<< Home