Tuesday, March 17, 2026

குறளறிஞர் முனைவர் மோகனராசு அய்யா






முனைவர் ஐயா மோகனராசு அவர்களிடம் இன்று  எனது திருக்குறள் நூல்களை நேரில் தந்த. மகிழ்வான தருணம்.

மதுரை பாபாராஜ்

மதிப்பிற்குரிய முனைவர் திருக்குறளறிஞர் மோகனராசு ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் என்னை அழைத்துப் பேசிய பண்பில் மகிழ்ச்சி அடைந்தேன்.

எனது திருக்குறள் நூல்களை அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள்.

1.திருக்குறள் பேழை
2.திருக்குறள் அறம்,பொருள்,இன்பம் ஆங்கில மொழியாக்கம்
3.திருக்குறள் இன்பத்துப்பால்
(குழந்தைகளுக்காக)
4.குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம்(கையடக்கப் பிரதி)
5. குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம் A4 அளவு

இவண்
தங்கள் உண்மையுள்ள
மதுரை பாபாராஜ்

 VOVDRMOHANARASU:

அருளுடையீர் வணக்கம்

திருக்குறள் மதுரை பாபா ராஜ் ஐயா அவர்களின் திருக்குறள் நூல்கள்


VOVCR:

மகிழ்ச்சியும் வாழ்த்தும்

வெண்பா கவிஞர் பாபாராஜ் க்கு குறள்

 வரலாற்றில் ஒரு இடம் உண்டு

பேராசிரியர் கு மோகனராசு ஐயாவுக்கு நன்றியும்

------------------------------------------------------------+-

 சிறப்பு அய்யா!

தூய நெஞ்சினர்!

துஞ்சாமல் குறள்பணி

ஆற்றிடும் செம்மல்கள்!

🙏🌹🙏🌹

இமயம்

🙏🙏❤️❤️👏👏👏💐💐💐💐முனைவர், குறள் அறிஞர் நமது திரு மோகனராசு ஐயா,  திருக்குறள் வெண்பா கவிஞர் நமது மதுரை பாபாராஜ் ஐயா இருவரின் சந்திப்பு இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

திருக்குறள் ஆர்வலர் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. 

👏👏❤️❤️💐💐🙏🏿🙏🏿✍️📚✍️📚🌱🌳🫡🫡

நமது வள்ளுவர் குரல் குடும்ப ஆய்வு அறிஞர்களில் முன்னோடிகள்.🙏🙏👏👏📚✍️📚✍️🙏🏿🙏🏿


திருக்குறளை உயிர் மூச்சாக கொண்டவர்கள்.


*உழைப்பே உயர்வு என உன்னதமாய் உச்சம் தொட்டவர்கள்*


🙏🙏மோகனராசு ஐயா அவர்களின் திருக்குறள் ஆய்வுகளின் தலைப்புகள் மெய்சிலிர்கக வைக்கும்  அளவிற்கு மிக வித்தியாசமான பார்வைகளில் ஓய்வில்லாமல் 60 ஆண்டுகளுக்கு மேலாக திருக்குறளின் கருத்துக்களை உலகத் தமிழ் மக்களுக்கு பயிலரங்கமாக/சட்ட வல்லுனர்களுக்கு தனி பயிலரங்கம்/ திருக்குறள் தூதர்களுக்கு சான்றிதழ்கள், திருக்குறள் பிரியர்களை கண்டெடுத்து திருக்குறள் அறிஞர்களாக உருவாக்கி எழுச்சியுடன் பரப்பி வருகிறார்.

*உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்* எனவும்  *முயற்சி திருவினையாக்கும்* வள்ளுவப் பேராசனின் வாய்மொழிகளை நிரூபித்து வருகிறார். வணங்கி மகிழ்கிறோம் ஐயா. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

 உங்கள் திருக்குறள் சேவை தொடரட்டும்.🙏🏿🙏🏿✍️📚🫡🫡🙏🏿🙏🏿 நீங்கள் பூரண நலத்துடன் பல்லாண்டு வாழ்க என இயற்கை அன்னையை வணங்குகிறோம்.

🙏🙏✍️📚🫡🫡👏👏💐💐🙏🙏🌱🌳🙏🏿🙏🏿


கவிஞர் பாபாராஜ் அவர்கள்

திருக்குறளின் காமத்துப்பாலை குழந்தை செல்வங்களுக்கான கருத்துக்களாக புதியதோர் பரிணாமத்தை உருவாக்கியுள்ளார். இரண்டடி திருக்குறளுக்கு எதுகை மோனை உடன் திருக்குறள் வடிவில் குறள் வெண்பா படைத்து மெருகேற்றி உள்ளார்.👌👌📚✍️🫡🫡🌱🌳🌹🌹🙏🏿🙏🏿திருக்குறளுக்கு ஆங்கில மொழியாக்கம் அழகாக எழுதியுள்ளார். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகர் என 

பல்துறைத் திறன் (multi skilled ) படைப்பாளி. பெருமிதம் கொள்கிறோம் ஐயா. தொடரட்டும் உங்கள் தமிழ் சேவையும், திருக்குறள் சேவையும். வாழ்த்துகள்! பாராட்டுகள்!

🙏🙏👏👏👏✍️📚✍️📚💐💐💐🙏🙏


நமது ஆர் பாலகிருஷ்ணன் ஐயா IAS, முனைவர் ஜெயசீலன் ஐயா IAS, டாக்டர் அஷ்ரப் ஐயா, ஹெலினா மேடம், சட்ட வல்லுநர் ஆனந்தபகவதி மேடம்,சீனி வரதராஜர் ஐயா,மெய்ஞானி ஐயா, கதிரவன் ஐயா,தனித்தமிழ் வித்தகர் ராமானுஜம் ஐயா என திருக்குறள் காதலர்களின் பட்டியல் நூற்றுக்கு மேற்பட்டோரின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.


எத்தனை எத்தனை ஆளுமைகளையும் இணைத்த நமது வள்ளுவப் பேராசானுக்கு முதல் வணக்கம்.📚✍️🙏🏿🙏🏿

ஒருங்கிணைப்பாளர் திரு.சி. இரா.ஐயா அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். 

🙏🙏👏👏👏💐💐💐🤝🙏🙏

மொகலீஸ்வரன் விசாகை

 

0 Comments:

Post a Comment

<< Home