Sunday, August 02, 2009

தாயின் பெருமிதம்!

------------------------------------
தாயமுதம் பெற்றெடுத்த தேன்மழலைப் பிஞ்சுமொழி
வாயமுதம் பொங்கிவரும் நற்சுவையின் முன்னாலே
பாற்கடலில் பொங்கிவந்த நல்லமுதத் தேன்சுவையோ
தோற்றுவிடும் என்றேதான் சொல்.

கனிமழலைத் தேனமுதப் பிஞ்சு வளர்ந்து
அணியணியாய்ச் சாதனைக்கு வித்தூன்றும் போது
புனிதவதி தாயிங்கே பூரித்து நிற்பாள்!
இனிதினிது வாழ்வென்பாள் பார்,

0 Comments:

Post a Comment

<< Home