Sunday, August 28, 2011

வாழ்க தமிழறிஞர்

பட்டிமன்ற மேடையின் பொன்விழா நாயகர்
தமிழறிஞர் சாலமன் பாப்பையா
வண்டமிழ்போல் வாழ்க
1961-2011
======================================
பண்பாளர் பாப்பையா பட்டிமன்ற மேடையிலே
பொன்விழா நாயகராய்ப் பார்போற்ற வாழ்ந்துவரும்
தென்மதுரை தந்த நகைச்சுவை நாவலர்!
வண்டமிழ்போல் வாழ்க நிலைத்து.


எளிய தமிழில் புரிகின்ற வண்ணம்
தெளிவாய்க் கருத்தை விளக்கும் முறையில்
அளிக்கின்ற வாதம் வியப்பினில் ஆழ்த்தும்!
புவிமக்கள் போற்றுகின்றார் சூழ்ந்து.

இந்தப் புகழுக்குப் பின்னணியில் உள்ளவை
உங்கள் மனைவியின் பங்களிப்பும் ஆதரவும்!
அன்பான இல்லறத்தைப் போற்றும் மனைவியுடன்
மங்கலமாய் வாழ்கபல் லாண்டு.

--தங்கள் ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்
வசந்தா பாபாராஜ்
சென்னை-

0 Comments:

Post a Comment

<< Home