Monday, August 22, 2011

வாழ்வின் இரகசியம்!


=======================
குழந்தைப் பருவந்தான் மொட்டுப் பருவம்!
வளரும் பருவம் இதழ்கள் பருவம்!
உளங்கவரும் மொட்டு விரிந்து விரிந்து
மலராகும் காட்சியைப்போல் வாழ்வில் பருவம்
பலகடந்த பின்பே மலரும் முதுமைப்பூ!
உலகியல் வாழ்வில் படிப்படி யாக
தவறாமல் முன்னேற்றம் காணலாம்! ஆனால்
முயற்சியின்றி நாளும் குறுக்குவழி சென்று
வரவேண்டும் எல்லாம் உடனடியாய் என்றால்
மலராத மொட்டாக வாடி மறைவோம்!
தரணியின் வாழ்க்கை ரகசியத்தைச் சொன்னார்
மலரால் இறைவன்தான் இங்கு.
==========================================

0 Comments:

Post a Comment

<< Home