Saturday, August 27, 2011

காட்சிமாற்றம் எப்போது?


===========================
சாக்கடை துர்நாற்றம் குப்பைக் கழிவுநெடி
மூகைத் துளைக்கிறதே!அப்பப்பா--மக்களெல்லாம்
எப்படித்தான் வாழ்கின்றார் இத்தகைய சூழ்நிலையில்?
எப்பொழுது மாறும் விளம்பு.

ஆட்சிமாற்றம் தந்துவிட்டார் மக்கள்தான் நாட்டிலே!
காட்சிமாற்றம் ஏற்படுத்தி மக்களைக் காப்பதோ
ஆட்சியின் அன்றாடத் தொண்டும் கடமையுமாம்!
நாட்டுமக்கள் வாழ்த்தே பலம்.
=============================================

0 Comments:

Post a Comment

<< Home