Thursday, April 23, 2015

எல்லோரும் காரணம்!
--------------------------
கண்ணே! மணியே! கனியமுதக் கற்கண்டே!
என்றெல்லாம் பாராட்டி சீராட்டிப் பார்த்தமகள்
இன்றோ தெருத்தெருவாய்ப் பிச்சை எடுக்கின்றாள்!
என்னபாவம் செய்தாள் இவள்?

விதியென்று சொல்லிச் சமுதாயம் பார்க்கும்!
மதிபிறழ்ந்த மாதென்று மாந்தர்கள் பார்ப்பார்!
மதிமுகத்தாள் முற்பிறவிப் பாவமென்றும் சொல்வார்!
இதுவோ? அதுவோ? குடிமகளைக் காக்கும்
துடுப்பாக  வேண்டும் அரசு.
----------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home