Tuesday, March 01, 2016

உன்னுள்ளே


உன்னுள்ளே

அவரவர் எல்லைக் குள்ளே
அவரவர் அரச ராவார்!
எவரெவ ரான போதும்
எல்லையை மீறல் தீது!
தவறெனின் ஏற்றுக் கொள்ளும்
தவநிலை ஏந்த வேண்டும்!
தவறிலை என்றால் நிமிர்ந்தே
தனிநடை பயில வேண்டும்!

0 Comments:

Post a Comment

<< Home