Saturday, June 03, 2017

வைரவிழா நாயகர்--வண்டமிழ்க் காவலர்

குறளோவியம் கலைஞருக்கு

வாழ்த்துப்பா!

03.06.2017
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலைஞர் எழுதத் தொடங்கினால் சொற்கள்
அலைதிரண்( டு) ஓடிவந்து நின்றுதான் கெஞ்சும்!
மலைக்கவைக்கும் சந்தநடைப் பாக்களில் கொஞ்சும்!
சுவைகளோ போட்டிபோடும் சொல்.

திரைப்படமா! மேடை முழக்கமா! இல்லை
கலைஞர் கடிதமா! எங்கும் தமிழே
நிலைக்கும்! அரசியல் ஏந்தும் அறிக்கை
தழைக்கும் தமிழால் செழித்து.

நெருப்பு முனையைத் திருப்பு முனையாய்
உருவாக்கிக் காட்டிய விற்பன்னர்! ஏந்தல்!
நெருப்பாற்றை நீந்திக் கடந்துவந்த சோழன்!
அருந்தமிழ் வாழ்க்கையின் முத்து.

சோதனையின் கொம்பொடித்துச் சாதனையாய் மாற்றியவர்!
நாடறிய ஏழைகள் முன்னேறத் திட்டங்கள்
வீடுதோறும்  தந்த விடிவிளக்கு நம்கலைஞர்!
நாடுபோற்றும் நல்லவரை வாழ்த்து.

சட்டமன்ற வைரவிழா நாயகரே! செந்தமிழே!
நற்றமிழ் போற்றும் குறளோ வியங்கண்ட
அற்புதக் காவியமே! வெற்றியின் புன்னகையே!
எப்பொழுதும் வாழவேண்டும் நீ.

0 Comments:

Post a Comment

<< Home