Tuesday, June 20, 2017

 சும!

சுமையிறக்க நாடிவந்து சொன்னபோதோ எந்தன்
இமையோ சுமைதாங்கி என்றுமே நீதான்!
சுமைதாங்கி  யாகத்தான் மாறிவிடு! என்றே
அமைதியாய்ச் சொன்னது பார்.

சுமைதாங்கி என்றும் சுமைதாங்கி யாக
சுமைதாங்கும் கல்லாக நாள்தோறும்  இங்கே
சுமையை வகைவகை யாக சுமந்து
சுமந்தே பழகவேண்டும் பார்.

தோள்கள் வலித்தாலும் நெஞ்சு துடித்தாலும்
கால்கள் துவண்டாலும் தாங்கப் பழகவேண்டும்!
தேள்கள் கொட்டினாலும் வேடிக்கை பார்க்கவேண்டும்!
பார்பார் சுமைதாங்கி பார்.

0 Comments:

Post a Comment

<< Home