Tuesday, June 20, 2017




மனசாட்சி

உள்ளத்தின் எண்ணத்தைச் சொன்னாலும் மற்றவர்கள்
உள்ளத்தில் ஓடுகின்ற எண்ணத்தை யாரறிவார்?
கள்ளத் தனமா? இல்லையா என்பதைச்
சொல்லும் கருவியுண்டோ சொல்.

அவரவர் நம்பும் மனசாட்சி ஒன்றே
அவரவர் சாட்சியென்பார்! நம்பவேண்டும் மாந்தர்!
தவறுகளைக் கூட தவறில்லை என்றால்
எவரென்ன செய்வார் ? உரை.

0 Comments:

Post a Comment

<< Home