Thursday, October 19, 2017



தீபாவளி வரவு செலவே!

மக்களை நம்பி உழைப்பால் பொருள்களை
உற்பத்தி செய்தேதான் திட்டமிட்டு நாள்பலவும்
விற்பனைச் சந்தையில்  வந்து குவிக்கின்றார்!
மக்களும் தங்கள் குடும்பம் குழந்தைகள்
பற்றுடன் அங்காடி அங்காடி யாயேறி
விற்கும் பொருளை விருப்புடன் வாங்குகின்றார்!
உற்பத்தி செய்த பொருளும் விற்கிறது!
மக்கள் மகிழ்கின்ற நாள்.

மக்களிடம் உள்ள பணத்தைப் பகிர்ந்தளித்து
மக்கள் உழைப்பால் விளைந்த பொருள்களை
அக்கறையாய் வாங்கி் மகிழ்கின்றார்! மக்களுக்கு
மக்கள் கைகொடுக்கும் பொன்னாளாய் எண்ணுவோம்!
சுற்றமுடன் சேர்ந்து மகிழ்ந்து.

நரகா சுரனை நினைத்தேதான் நாட்டில்
எவருமே கொண்டாட்டம் போடுவதில்லை! எல்லாம்
புராணக் கதைகளே! ஏதோ மகிழ்வார்!
வரவு செலவுதான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home