Thursday, October 19, 2017


மும்மொழி தேவையில்லை

அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும், எல்லோரும்
தொன்று தொட்டுப் பேசுகின்ற ஆங்கிலமும்
நன்முறையில் பள்ளிகளில்  கற்பதுவே போதுமே!
இன்னொன்றாய் இந்தியைக் கட்டாயம் கற்கவேண்டும்
என்றால் பிணக்குதான் சொல்.

வடநாட்டுப் பள்ளிகளில் தாய்மொழி இந்தி!
சிறப்புமொழி இந்தி! ஆங்கிலம் சேர்த்தால்
 என்றும் இருமொழிதான் அங்குள்ளோர்  கற்பார்!
வடநாட்டில் மும்மொழியா? சொல்.

இருமொழிதான் பள்ளிகளில்! மூன்றாம் மொழியை
விரும்பினால் இங்கே தனியாகக் கற்க
இருக்கிறதே அங்கங்கே கற்கும் வசதி!
கருத்துடன் கற்கலாம் அங்கு.

இந்திய நாட்டில் வடக்கில் இருமொழியும்
செந்தமிழ் நாட்டிலே மும்மொழியும் என்றுரைத்தால்
பிஞ்சு மழலையும் ஏளனமாய்ப் பார்க்கும்!
செந்தமிழ் துள்ளும் சினந்து.

0 Comments:

Post a Comment

<< Home