Saturday, April 21, 2018


தப்பினால்  தரு!

கருவறையில் தப்பிவந்து கள்ளிப்பால் தப்பி
பருவப் படியில் படிப்படியாய்த் தப்பி
வரும்நேரம் எப்பொழுது எப்படி வாழ்க்கை
அரவணைப்ப தைப்போல் அழிவின் அணைப்பைத்
தருகின்ற வக்கிர உக்கிரத்தில் யார்யார்
சருகாய் உதிராமல் தப்புவார் இங்கு?
தருவாவாள் தப்பினால் தான்.

0 Comments:

Post a Comment

<< Home