Saturday, April 21, 2018

சித்திரையே நித்திரையைக் கலை!

நீரில் நிலத்தில் மணலில் அடுத்தடுத்து
வேரோடி நிற்கிறதே எண்ணற்ற சிக்கல்கள்!
பார்க்கும் திசையெல்லாம் வீதியெங்கும் மக்களே!
ஆர்ப்பரித்தே தங்களைக் காக்கவேண்டும் என்றேதான்
ஊர்ஊராய் நிற்கின்றார் ஒன்று திரண்டேதான்!
சோர்வுகளை நீக்கவேண்டும்! வாழ வழிகாட்டு!
தீர்வளிக்க  சித்திரை மாதமே வா! வா! வா!
சீராக்க நல்லரசே! பார்.

0 Comments:

Post a Comment

<< Home