Friday, April 13, 2018


கர்நாடகக் காவிரியின் வேண்டுகோள்!

பிறந்தவீட்டில் என்னை அடைத்துவைக்கும் போக்கோ
உகந்ததல்ல!  அங்கே புகுந்தவீட்டில் ஓலம்!
வறண்டு உருவிழந்தே மக்கள் அழுது
கதறும் ஒலிகேட்டும் கேளாச் செவியாய்
அடம்பிடிக்கும் போக்கு சரிதானா? தாயே!
பிறந்தவீடு பெண்ணுக்குத் தங்குமடம்! ஆனால்
அகத்தில் புகுந்தவீடே  பெண்ணை மதிக்கும்!
அடம்பிடிக்க வேண்டாமே! நீதிமன்றத் தீர்ப்பை
நிறைவேற்றி என்னைப் புகுந்தவீட்டில் வாழ
விடைகொடுத்தால் வீடு வளமாகும்! இல்லை
 உடைப்பெடுக்கும் மேகம்! குதித்தோடிப் பாய்வேன்!
மடையுடைத்த வெள்ளமாய் நான்புகுந்த வீட்டில்
நிறைவுடனே சென்று மகிழ்ந்தாடி வாழ்வேன்!
கடமைக்குத் தாழிடாதே நீ.

0 Comments:

Post a Comment

<< Home