Sunday, April 08, 2018

இனியவை நாற்பது
பாடல் 11

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.
--------------------------------------------------------------------------------------------
தடம்மாறி  வாழா திருத்தல் இனிது!
அறவழி விட்டுப் பொருள்சேர்க் காத
புகழ்வாழ்க்கை இங்கே இனிதே! தமிழே!
அகமொன்றும், பேசும்  புறமொன்று மாக
பகைகொண்டோர் உண்ணத் தகாதாராம்! அன்னார்
அகம்சென்றே உண்ணா திருத்தல் இனிதே!
அறவாழ்வால் நெஞ்சம் நிமிர்.

0 Comments:

Post a Comment

<< Home