Saturday, April 07, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்:
பூதஞ்சேந்தனார்

பாடல் 9

தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.

நிழல்போல் பழகிடும் நண்பர்கள் செல்வம்
செழித்திட வாழ்தல் இனிது! தமிழே!
அழகிய வானில் நிலவினைக் காணும்
அழகோ இனிது! மனத்திலே மாசின்
நிழலின்றி அன்புள்ளம் கொண்டவ ராக
பழகும் உறவோ இனிது.

0 Comments:

Post a Comment

<< Home