Saturday, April 07, 2018



இனியவை நாற்பது
பாடல். 8

ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது

வீரனுக்குத் துள்ளும் குதிரை இனிதே!
அரசனுக்கோ மாமலை  போன்றிருக்கும் யானை
உரசிச் சினமுடன் போரிடும் கோலம்
வளர்வதைக் காணல் இனிது! அன்பின்
நிழலான அன்புடையார் சொற்களைக் கேட்டல்
தரணியில் என்றும் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home