Thursday, April 05, 2018



பாவம் காதுகள்

நேருக்கு நேரிங்கே பேசுகின்ற நேரத்தில்
நேரமின்றி பேசுதல்போல் இங்கே குறைவாக
சாரமின்றிப் பேசுவார்! வீடுசென்று கைபேசி
மூலமாகப் பேசத் தொடங்கினால் அம்மம்மா!
நேரமே போவது ஒன்றும் தெரியாமல்
சாரமற்ற பேச்சைப் பரபரப்பாய் வேகமாக
காரசார மாகத்தான் பேசிடுவார்! அப்பப்பா!
பாவந்தான் காதுகள்! சொல்ல முடியாமல்
பாவமே என்றுகேட்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home