Friday, March 30, 2018


காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு!(30.03.2018)

நீரின்றி அமையாது வாழ்க்கை!

காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டமைத்தே
காவிரி சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டுமென்று
சீரிய தீர்ப்புதனை உச்சநீதி மன்றத்தின்
நீதிபதி சொல்லியும் எந்த அரசுமிங்கே
பாதியடி கூட எடுத்துவைக்க வில்லையே!
நீதியைப் போற்றவேண்டும் நாடு.

விளைநிலங்கள் எல்லாம் வறண்டு வெடிக்க
மலைப்பில் உழவர்கள் திண்டாடி நிற்க
களைப்புடன் வானத்தை அண்ணாந்து பார்த்தும்
நிலைமைக்கே அஞ்சுகின்றார் காண்.

நாள்கள் கெடுவும் முடிந்துவிட்ட நேரத்தில்
நாடெல்லாம் போராட்ட கோலம்! திட்டமென்ற
ஆங்கிலச் சொல்லின் பொருள்விளக்கம் கேட்கின்றார்!
ஏங்கும் நிலைமாறு மா?

பழிபோடும் ஆட்டத்தை ஆடாமல் நல்ல
வழிகிடைக்க சிந்தனையைத் தீட்டுவதே நன்று!
அழிவைத் தடுத்தல் அரசின் கடமை!
தெளிவாய் முடிவை எடு.

0 Comments:

Post a Comment

<< Home