Friday, March 30, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமை!(26.03.2018)

காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டமைத்தே
காவிரி சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டுமென்று
சீரிய தீர்ப்புதனை உச்சநீதி மன்றத்தின்
நீதிபதி சொல்லியும் எந்த அரசுமிங்கே
பாதியடி கூட எடுத்துவைக்க வில்லையே!
நீதியைப் போற்றவேண்டும் நாடு.

விளைநிலங்கள் எல்லாம் வறண்டு வெடிக்க
மலைப்பில் உழவர்கள் திண்டாடி நிற்க
களைப்புடன் வானத்தை அண்ணாந்து பார்த்தும்
நிலைமைக்கே அஞ்சுகின்றார் காண்.

நாள்கள் எண்ணப் படுகின்ற நேரத்தில்
நாடெல்லாம் போராட்ட கோலம்! கெடுமுடியும்
நாளுக்குள் மத்தியும் மாநிலமும் நற்செய்தி
தூதளித்துக் காப்பாற்றித் தா.

0 Comments:

Post a Comment

<< Home