Friday, March 30, 2018

பாடல். 3

ஏவது  மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
---------------------------------------------------------------------------------------------------------------
சொன்னதைச் சொன்னபடி செய்கின்ற ஏவலரைக்
கொண்டிருக்கும் பேறோ இனிது! குற்றத்தில்
கொஞ்சமும் ஈடு படாமலிங்கு கற்பதோ
என்றும் இனிதாம்! உழவரின் வேளாண்மை
மண்ணுயிர் காத்தல் இனிது! திக்கெல்லாம்
சென்றாலும் நல்லா ருடன்நட்( பு) இனிதாகும்!
பின்பற்று வாழ்வே இனிது.

0 Comments:

Post a Comment

<< Home