Friday, March 30, 2018

இனியவை நாற்பது

கவிதை வடிவில்

பாடல். 1

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
முத்தேர்  முறுவலார்  சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
---------------------------------------------------------------------------------------------------------------------
பிச்சை  எடுத்தேனும்  கற்ப தினிதாகும்!
கற்றவை நல்லவையில்  கைக்கொடுத்தல்  கற்றதினும்
முற்றும் இனிதாகும்! முத்தான பல்மிளிறும்
இத்தரை மாதரின் வாய்ச்சொல் இனிதாகும்!
கற்றறிந்த சான்றோர் துணைகொள்ளல்  மேதினியில்
எப்பொழுதும் வாழ்வில் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home