Sunday, March 25, 2018

பாடல் 109

தோழியின் கூற்று,!

பாடலாசிரியர்:
நம்பி குட்டுவனார்

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

வளைவான காலும் வளைந்த முதுகும்
அழகைப் பறைசாற்ற நீந்தும் இறால்மீன்
வளங்கொண்ட நாட்டிலே மீனவன், அன்பன்!
கலந்து பழகினாலும்  என்தலைவி வாடும்
நிலைதந்தே இங்கே பிரிவான் அழகு
மிளிர்கின்ற நெற்றி பிரிவுத் துயரால்
ஒளியிழந்த கோலத்தைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home