Saturday, March 17, 2018



வள்ளுவத்தைச் சீண்டாதே! 12.03.18

செந்தமிழைச் சீண்டுவோர்கள் எங்கெங்கே வாழ்ந்தாலும்
கண்டிக்கச் சீறி எழுந்திடுவோம்! ஆர்ப்பரிப்போம்!
எந்தத் தடையெனினும் தாண்டும் நிலையெடுப்போம்!
செந்தமிழ்த் தாயே அருள்.

வள்ளுவத்தை வம்புக் கிழுப்பவர்கள் பாவிகளே!
கிள்ளி எறிகின்ற கீரையா  வள்ளுவம்?
செல்லரித்த வாதத்தை மீண்டும் அரங்கேற்றும்
குள்ளநரித் தந்திரம் வெல்லா(து) ஒருபோதும்!
 உள்ளக் கொதிப்பினைக் காட்டு.

பிறப்பொக்கும் என்றுரைக்கும் வள்ளுவம் எங்கே?
பிறப்புகளில் நால்வருணம் காட்டிப் பிரித்த
முடைநாற்ற சாத்திரக் குப்பைகள் எங்கே?
கடைவிரிக்கும் போக்கை நிறுத்து.

0 Comments:

Post a Comment

<< Home