Saturday, March 17, 2018

கருணைக் கொலை



கருணைக்கொலை
கருணையும் கொலையும் முரண்!

சட்டங்கள் இங்கே அனுமதிக்கும்! ஏனென்றால்
குற்ற உணர்ச்சிகள் சட்டத்திற் கில்லையே!
உற்றார் உறவினர் எல்லாம் போராடி
சுற்றிநின்று கைபிசைந்து நின்றிருக்க இன்னுயிரோ
பற்றகற்றி இங்கே இயற்கையாய் யாக்கையை
விட்டகன்றால் என்றும் உறுத்தலின்றி வாழலாம்!
மற்றபடி வாட்டும் மனது.

0 Comments:

Post a Comment

<< Home