Tuesday, February 13, 2018

செல்வன் சொ.ராம்குமாருக்குப்
பிறந்தநாள் வாழ்த்து

2.2.2018

அன்பான பெற்றோர் கடமை தொடர்ந்திருக்க
உன்னை அவையிலே முந்தி இருப்பதற்குப்
பண்புகளை ஊட்டி படிக்கவைத்துப் பார்க்கின்றார்!
நன்னெறி காட்டும் அவர்கள் மகிழ்ந்திருக்க
முன்னேறும் நீயும் அவர்களுக்கு நற்பெயரை
இந்தச் சமுதாயப் பேரரங்கில் ஆற்றலால்
பன்முகச் சாதனையை ஈட்டுகின்றாய்! மக்களும்
உன்னை மகனாகப் பெற்றெடுக்க உன்பெற்றோர்
என்னதவம் செய்தனரோ என்றேதான் வண்டமிழால்
இன்றிங்கே வாழ்த்துகின்றார்!  இன்பமுடன் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

0 Comments:

Post a Comment

<< Home