Saturday, March 17, 2018




உயிர்த்துடிப்பு நீ!

பெண்ணே! மலராக வாழ்ந்தது போதுமே!
உன்னைக் கசக்கத் துடிக்கின்றார் பாவிகள்!
பொன்மனம் கொண்டது போதுமே! பாவிகள்
உன்னை உருக்கத் துடிக்கின்றார்! மண்ணகத்தில்!
தென்றலாய் வீசியது போதுமே! மென்மையைப்
பந்தாடிப் பார்க்கின்றார் பாவிகள்! உள்ளத்தால்
அன்பைப் பொழிந்தது போதும்! இரக்கமின்றி
வம்பிழுத்து வாடவைத்துப் பார்க்கின்றார் பாவிகள்!
 இங்கே பொறுமையாய் வாழ்ந்தது போதுமே!
பொங்கி எழுந்தேதான் போராடு! சுண்டிவிட
என்னநீ அஃறிணையா? இல்லை! உயர்திணை!
நின்றே எதிர்கொள்! மறுபக்கம் காட்டவேண்டும்!
உன்வலிமை உன்னிடம்! இன்றே உணர்ந்திடு!
பெண்ணே! உயிர்த்துடிப்பு நீ.

0 Comments:

Post a Comment

<< Home