Saturday, March 17, 2018



புலமை வறுமை!

எந்தன் திறமையைப் பாராட்டி ஆகாகா
அன்பாய் விருதுகளை அள்ளி வழங்கினார்!
இந்த விருதுகளை வைப்பதற்கோ இல்லத்தில்
எங்கும்  இடமில்லை! என்செய்வேன்? ஏதுசெய்வேன்?
என்னில்லம் ஓலைக் குடிசைதான்! தந்ததென்ன
பொன்பொருளா? விற்பதற்கு? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home