Friday, March 30, 2018

இனியவை நாற்பது


பாடல் 2

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி,நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.
----------------------------------------------------------------------------------------
பொருளிருந்து தந்துதவும்  ஈகை இனிது!
இருமனம் ஒன்றாய்ப் பிணக்குகள் இன்றிப்
பெருமை மிளிரும் மனையோ இனிது!
தரணியின் வாழ்க்கை நிலையற்ற தென்றே
உளத்தால் துறத்தல் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home