Friday, March 30, 2018

பாடல். 4

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே
,மானம் உடையார் மதிப்பு.
------------------------------------------------------
யானைப் படைகொண்ட வேந்தனின் வாழ்க்கையோ
ஆனமட்டும் வெல்லும் முயற்சிக்( கு) இனிதாகும்!
ஊனை வளர்க்க பிறஉயிரைக் கொன்றுண்ணும்
ஈனத்தை விட்டொழித்தல் என்றும் இனிதாகும்!
தேனக ஆறுகள் சூழ்ந்த ஊரினிது!
மானமுடன் வாழ்தல் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home