Friday, March 30, 2018

பாடல். 6

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.
--------------------------------------------------------------------------------------------------------
இயன்ற அளவில் அறம்செய்! இனிது!
உயர்ந்தோர் அறவுரையைக் கேட்ப( து)  இனிது!
வளங்களுடன் கல்வி அனைத்தும் இருந்தும்
தரங்குறைக்கும் நானென்ற ஆணவம் இல்லா
உளங்கொண்டோர் தம்மைத் துணையாக ஏற்கும்
நிலையொன்றே வாழ்வில் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home