Saturday, April 07, 2018



இனியவை நாற்பது

ஆசிரியர்:
பூதஞ்சேந்தனார்

பாடல் 10

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு.

கடனின்றி வாழ்தல் உலகில்  இனிது!
தடம்புரளும் இல்லாளை நீங்கல் இனிது!
அகத்தூய்மை இன்றி பழிசுமக்கும்  தீயோர்
உறவுக்கே அஞ்சி விலகல் இனிது!
அகவொழுக்கம்  வாழ்வின் உயிர்.

0 Comments:

Post a Comment

<< Home