Friday, April 13, 2018



இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார்

பாடல் 14

குழவி தளர் நடை காண்டல் இனிதே
;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
தவினையுடையான் வந்து அடைந்து
வெய்து உறும் போழ்து
,மனன் அஞ்சான் ஆகல் இனிது.

குழந்தைகள் தத்தும் தளர்நடை பார்த்தல்
அழகே! இனிதே! அமுதநிகர் பேச்சின்
மழலையைக் கேட்டல் இனிதே! உலகில்
தரமற்ற தீயோர் சினங்கண்டே அஞ்சிக்
கலங்காமல் வாழ்தல் இனிது

0 Comments:

Post a Comment

<< Home