Friday, April 13, 2018

இனியவை நாற்பது

ஆசிரியர்
பூதஞ்சேந்தனார்

பாடல் 13

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.

வாழும் நிலையிருந்து தாழும் நிலைவந்தால்
மாளும் நிலையோ இனிது! அறம்செய்ய
ஆளும் பொருள்குறையா வண்ணம் அடக்கமாக
வாழ்தல் இனிது! தொந்தரவே இல்லாமல்
வாழும் வளம்பெற்ற குற்றமற்ற இன்பநிலை
காலமெலாம் மக்களுக்கு ஊறுகின்ற இனிமைதான்!
ஞாலம் புகழும் வியந்து.

0 Comments:

Post a Comment

<< Home