Tuesday, April 17, 2018


வல்லவர்கள் இங்கில்லையா?

கல்வித் துறையையும் காவி மயமாக்கும்
பொல்லாத எண்ணம் வேரூன்ற விட்டுவிட்டால்
எல்லையற்ற தொல்லைக்கே ஆளாக நேரிடும்!
வல்லவர்கள் இங்கில்லை யோ?

அமைதியாக வாழும் தமிழ்நாட்டை அமளிச்
சுனையாக மாற்றும் நிகழ்வுகள் நாளும்
தினவெடுத் தாடுகின்ற கோலங்கள் போடும்
மனநிலை தேவையா? சொல்.

எண்ணற்ற பன்முக  ஆற்றலாளர் இங்குண்டு!
இங்கெதற்குக் கன்னட நாட்டார் துணைவேந்தர்?
அண்ணா பெயரேந்தும்  பல்கலைக் கூடத்தை
வண்டமிழே சற்றும் தெரியாதோர் ஆள்வதா?
என்ன நியாயமோ? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home