Tuesday, April 23, 2019

அறத்துப்பால்
--------------------------------
திருக்குறள்
------------------------------
கடவுள் வாழ்த்து 1
-----------------------------------------------
தமிழின் தொடக்கம் அகரம்
உலகின் தொடக்கம் இயற்கை
-------------------------------------------------------
எழுத்தின் தொடக்கம் அகரந்தான்!
உலகின் தொடக்கம் இயற்கைதான்!

சான்றோர் வழியை வணங்கிடுவோம்
இல்லையேல் கற்றது வீணாகும்!

நினைக்க நினைக்க நிம்மதிதான்!
நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!

துன்பம் நம்மை நெருங்காது
தீவினை நம்மைச் சேராது!

ஆசை தன்னை அடக்கித்தான்
ஒழுக்கத் தோடு வாழ்ந்திடலாம்!

அவரடி பணிந்தால் போதுமே
கவலைகள் எல்லாம் நீங்குமே!

மறந்து போன மற்றவர்க்கோ
கவலைகள் நிலையாய் மாறிடுமே!

ஆசைக் கடலைக் கடப்பதற்கோ
அன்புத் தோணி சான்றோர்தான்!

சான்றோரை வணங்காத் தலைகளோ
இயங்காப் புலன்போல் பயனில்லை!

சான்றோர்  வழியில் நடந்தாலே
பிறவிக் கடலை நீந்தலாம்!

0 Comments:

Post a Comment

<< Home