Saturday, October 26, 2019

சுர்ஜித்தே எழுந்து வா!

ஆழ்துளை ஆழக் கிணற்றுக்குள் சுர்ஜித்தே!
ஆழத்தில் நேற்று விழுந்துவிட்டாய்!  இங்கேபார்!
வேழமென நீயிங்கே மீண்டெழுந்து வந்துவிடு!
நேயமுடன் வேண்டுகிறோம் வா.

அரசும் துறைகளும் மக்களும் சேர்ந்து
பலவழியில் உன்னைத்தான் மீட்டெடுத்துப்
பார்க்க
சுழன்றே பணியாற்றி நிற்கின்றார் சூழ்ந்து!
நலமுடன் நீயெழுந்து வா.

மதுரை பாபாராஜ்
26.10.19
8.58  pm

0 Comments:

Post a Comment

<< Home