Tuesday, October 22, 2019

தங்குமடம்.!

தங்கும்  மடங்கள்தான் இவ்வுலகம்! இல்லங்கள்!
இன்றிருப்போர் நாளையில்லை! நேற்றிருந்தோர் இன்றில்லை!
என்றிருக்கும் வாழ்விலே
ஆணவத்தில் துள்ளுகின்றார்!
என்னுடைமை உன்னுடைமை என்றே விலகிநிற்கும்
தன்னலத்தில் வாழ்கின்றார்!
தன்னிலையில் தாழ்கின்றார!
எந்தப் பொருளும், எவரும் வரமாட்டார்
உன்னுடன் அந்த இறுதிப் பயணத்தில்!
உன்முறை என்றுவரும் என்றே தெரியாது!
வந்தாலும் எப்படி எங்கே? தெரியாது!
மண்ணகமே தங்குமடம் மாந்தரே துள்ளவேண்டாம்!
தங்குமடம் எத்தனைநாள்? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home