Wednesday, December 25, 2019

கவிஞர் குறளடியான் அகவை 70!

நூறாண்டு வாழ்க!

நற்கூடல் மேடைகளில் எங்கள் குறளடியான்
சொற்கூட்டிப் பாடுகின்ற ஆற்றலை எண்ணுகின்றேன்!
அற்புதமாய் ஆற்றலைத் தக்கவைத்து
வாழ்கின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

உள்ளத்தில் கள்ளமற்ற வெள்ளந்தி நண்பராவார்!
எல்லோர்க்கும் நல்லவராய் நல்லதையே சிந்திக்கும்
வள்ளுவத்தை வாழ்வியலாய் மாற்றி குறளடியான்
இல்லறத்தார் சூழ்ந்திருக்க வாழ்கின்றார்
வாழ்த்துவோம்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

செந்தமிழ்த் தொண்டர்! மனித்தேய ஆர்வலர்!
புண்படுத்திப் பார்க்காமல் பண்படுத்தும் பண்பாளர்!
அன்றிருந்து இன்றுவரை நட்பைத் தொடர்பவர்!
செந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மகனுக்கு அகவை 40

இனியவை நாற்பதாக வையகத்தில் வாழ்க!
மனிதத்தைக்  காக்கும் குறள்களை வாழ்வில்
மனதாரப் பின்பற்றி வாழியவே! நீடு!
குணக்குன்றாய் வாழ்க  குறளடியான் மைந்தன்!
மனையறம் காத்துவாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா



0 Comments:

Post a Comment

<< Home