Wednesday, December 25, 2019

Kavignarkamalkumar:
வணக்கம். இன்று சூரிய கிரகணம். அது முடியும் வரை ஏதும் உண்ணக் கூடாதாம். நண்பர்கள் பசி தாங்க மாட்டார்களே என்று தட்டு நிறைய இட்டிலி படைக்கிறேன்.

மானச உணவு. மகிழ்ந்து உண்க.

இட்டிலிக்கு சாம்பார் இனிதான கூட்டுதான்
சட்டினி யோடு மிளகாய் பொடியுமே
வட்டமான தட்டினிலே வண்ணமாய் மின்னுதே
பிட்டுபிட்டுத் தின்பாய் மகிழ்ந்து

கமல்
26.12.2019

மதுரை பாபாராஜ்:
படித்ததில் பிடித்தது

*When it is a question of money, everybody is of the same religion*.

*-Voltaire*

*Good morning *
*2612*

Vovmeignaniprabakarababu:
நன்று😊😊

இட்டிலிக்குச் சட்டினி இன்பம் அளித்தது
தட்டினில் மீதமே வைக்காது கொட்டிச்
சுவைத்துப் புசித்தேன் சுகமே அடைந்தேன்
அவற்றின் சுவையோ அமுது

Kavignarkamalkumar:
பணமென்று வந்தாலே பாரோர்க்கு மனமொன்று
என்றறிந்த சான்றோர்கள் செப்பினார் நன்கு
தனமென்று வந்தக்கால் தாரணியில் சாய்ந்த
பிணமும் திறந்திடும் வாய்!

கமல்
26.12.2019

பாபாவின் கருத்துப் பதிவை ஒட்டி...

மதுரை பாபாராஜ்:
காலைப் பொழுதில் கவிதை மழைப்பொழிவில்
சோலைக் குயில்களின் சொக்கவைக்கும் இன்னிசை
தேன்மழையாய் காதிலே பாயுதே பாவலர்காள்!
கானமழை கேட்போம் தொடர்ந்து.

மதுரை பாபாராஜ்

Kavignarkamalkumar:
நன்றி. இந்த இரு வெண்பாவும் தங்களால் தூண்டப் பட்டவையே.🙏

0 Comments:

Post a Comment

<< Home