Saturday, December 21, 2019


கணிதமேதை இராமாநுசன் புகழ் வாழ்க!
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த கணித அறிஞர்.
-----------------------------------------------------------------
பள்ளிப் பருவத்தில் ஏழ்மை வறுத்தெடுக்க
கிள்ளும் பசிக்கோ உணவாகத் தண்ணீரை
அள்ளிப் பருகித்தான் பள்ளிக்குச் சென்றாராம்!
பள்ளிக்குச் செல்லாமல் கோயில் வளாகத்தில்
தெள்ளத் தெளிவாய்க் கணக்குகளைப் போடுவாராம்!
தொல்லை கொடுத்த வறுமையிலும் எண்கணிதம்
எல்லையற்ற ஆற்றலைக் கொண்டே உயர்ந்தவராம்,!
நல்லவர் வல்லவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home