Thursday, December 19, 2019

காவல்துறைக்கு ஒத்துழைப்போம்!

நாட்டிலே சட்டம் கடமையைச் செய்தாலே
ஊற்றெடுக்கும் குற்றங்கள் ஓடி
ஒளிந்து விடும்!
நாட்டுமக்கள் சட்டத்தை நாளும் மதித்துவாழ்ந்தால்
நாட்டில் தனிமனித நல்லொழுக்கம் வேரூன்றும்!
போற்றாதே வக்கிரத்தை! மாறு.

காவல் துறையினர் தங்கள் கடமைகளை
ஆவலுடன் செய்கின்றார்! மக்களும் சட்டத்தை
நாளும் மதிக்கவேண்டும்! இத்தகைய பண்பாடே
நாட்டை நெறிப்படுத்தும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home