Wednesday, January 15, 2020

1330 குறள்களுக்கும் படப்புதிர் !

சாதனை நாயகன் அஷ்ரப் வாழ்க!

வள்ளுவரின் ஆயிரத்து முந்நூற்று முப்பது
தெள்ளுதமிழ்த் தேன்குறள்கள் தம்மைப்
புதிர்ப்படத்தால்
அள்ளி வழங்கியே நாள்தோறும் வள்ளுவர்
கூட்டுக் குடும்பத்தார் மாலைமணி ஏழரைக்கு
ஊற்றெடுக்கும் ஆர்வத்தால் பங்கேற்று
அப்புதிருக்(கு)
ஏற்ற குறளெண்ணைக் கூறவைப்பார்!
வெற்றியாளர்
யாரென்ற பட்டியலைப் பார்த்தேதான் வாழ்த்துவோம்!
தேர்ந்தெடுத்த அக்குறளும் ஆங்கிலமும்
அப்படத்தில்
சேர்த்தளிப்பார் அஷ்ரப்தான் இங்கு.

இமாலயச் சாதனை நாயகன் அஷ்ரப்
இமயம்போல்  வாழ்கவே! புன்னகை மன்னன்
குறள்நெறி  போற்றுகின்ற வித்தகர் வாழ்க!
சிறப்புடன் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
15.01.2020

0 Comments:

Post a Comment

<< Home