Thursday, January 09, 2020

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:336)

பொழிப்பு (மு வரதராசன்): நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

தந்தை தெய்வத்திரு முத்துசுப்பு அவர்கள்
காலையில் இருந்தார்! மாலையில் இல்லை!

10.11.1980

MY DUTY IS OVER!

கென்னட் மருத்துவக் கூடத்தில் பிள்ளைகள்
நன்கு சிகிச்சை முடிந்து வெளிவந்தார்!
என்தந்தை கோப்புகளை மேலிருக்கும் சொற்களைச்
சொல்லியே தந்தார்! மனமோ துணுக்குற்று
தந்தையேன் இப்படிச் சொன்னார்? ஒன்றுமில்லை
என்றே சமாதானம் சொல்லி அடக்கியது!
அன்றே கடைசிநாள்! தந்தை மறுநாளோ
மண்ணகம் விட்டகன்றார் காண்.

11.11.1980

காலைப் பொழுதிலே தந்தையிடம் சொல்லிவிட்டு
ஆர்வமுடன் அன்றோ அலுவலகம் சென்றுவிட்டேன்!
மாலை மணியோ மூன்று! தொலைப்பேசி
வந்தது! என்மனைவி என்னை அவசரமாய்
வந்துவிடச் சொன்னாள் தந்தை உடல்நிலை
என்னமோ செய்கிறது என்றாள்! உடனேநான்
சென்றடைந்த போதங்கே தந்தையைச்
சுற்றிநின்று தேம்பி அழுதனர்! மருத்துவரை
நானோ அழைத்துவந்து காட்டினேன்! சோதித்தார்
வேதனைச் செய்தி உறுதிசெய்தார்! என்தந்தை
காலமாகி விட்டார்! காலையில் வாழ்ந்திருந்தார்!
மாலையில் இல்லை உயிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home